×

கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒருவரின் உடல் மீட்பு

கேரளா: கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய பள்ளிவாசலில் மத ஆசிரியராக பணியாற்றி வந்த பந்தலூரை சேர்ந்த ஷிஹாப் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளத்தில் பள்ளிவாசல் முழுவதுமாக அடித்து செல்லப்பட்ட நிலையில், பாறை இடுக்கில் ஷிஹாப்பின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 3வது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது

The post கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒருவரின் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala ,Wayanadu ,Bhandalur ,
× RELATED நிபா வைரஸ் எதிரொலி: தமிழ்நாடு – கேரள...