இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், `நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்குள் இதர கோழிகள் அல்லது வனப்பறவைகள் நுழைவதை தடுக்க வேண்டும். அனைத்து கோழிகளையும் உற்பத்தி முடிந்து, கழிவு செய்த பின்னரே புதிதாக குஞ்சுகள் வாங்க வேண்டும். பண்ணையில் மனித நடமாட்டம் மிக குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும். பண்ணையில் உள்ள ஒரு கொட்டகையில் இருந்து மற்றொரு கொட்டகைக்கு வேலை ஆட்கள் செல்லக்கூடாது.
கோழிப்பண்ணைக்குள் நுழையும் வாகனங்களின் சக்கரங்கள் மீது கிருமி நாசினிகளை விதை தெளிப்பான் மூலம் தெளித்த பிறகே பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை பண்ணை வளாகத்தை முற்றிலும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கோழிகள், வாத்துகள் மற்றும் வான்கோழிகள் போன்ற பல்வேறு வகை பறவையினங்களை ஒரே பண்ணையில் வைத்து பராமரிப்பதை தவிர்க்க வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது` என்றனர்.
The post கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 47 குழுக்கள் கண்காணிப்பு appeared first on Dinakaran.