கணியூர் ஊராட்சியில் பல்நோக்கு மைய கட்டிடம் திறப்பு; கோவை எம்.பி நடராஜன் திறந்து வைத்தார்

 

சோமனூர்,நவ.9: கணியூர் ஊராட்சியில் உள்ள குமார் நகரில் பல்நோக்கு மைய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன் திறந்து வைத்தார்.
குமார் நகரில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூ.16.50 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.விழாவிற்கு கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.ஊராட்சியின் துணைத் தலைவர் ராஜூ வரவேற்றார். கோவை பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் சதீஷ் குமார், மகேஸ்வரி, பழனிசாமி, சிவக்குமார், உமா மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி, மற்றும் முத்துராஜு, வட்டார வளங்கள் அலுவலர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவின் போது மரக்கன்றுகள் நடப்பட்டன. பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

The post கணியூர் ஊராட்சியில் பல்நோக்கு மைய கட்டிடம் திறப்பு; கோவை எம்.பி நடராஜன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.