இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாமரை குளம் நிரம்பி, மறுகால் வழியாக தண்ணீர் பாய்ந்து செல்கிறது. வாழை மற்றும் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளின் தேவைக்காக குளத்திலுள்ள 3 மடைகள் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வாழை நெல், மகசூலில் ஈடுபட்டுள்ள தாமரைகுளத்துப் பாசன விவசாயிகள் விவசாயப் பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர். அருவி போல் கொட்டும் மறுகாலில் சிறுவர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.
The post களக்காடு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தாமரைகுளம் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.