மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக மாறியுள்ளது.புதிதாக திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்களுக்கு நேற்று ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. நவம்பர் மாத கலைஞர் மகளிர் உரிமை தொகை இன்று மாலைக்குள் அனைவருக்கும் வரவு வைக்கப்படும்.இந்த திட்டம் எந்த சின்ன புகாருக்கும் இடமின்றி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தகுதியுள்ள யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது.உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.தகுதியானோர் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் முதல் அவர்களுக்கு தொகை வரவு வைக்கப்படும்.மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்துகாட்டி வெற்றி பெற்றுள்ளோம்.தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் வரை திராவிட மாடல் அரசின் பணி தொடரும்,”என்றார்.
The post நாட்டிற்கே முன்மாதிரியான மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. சாதனையை செய்து காட்டி வெற்றி பெற்றுள்ளோம் :முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.