நாம் எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுப்போம். தக்காளி விதையை விதைத்தவன் பப்பாளி பழத்தை அறுவடை செய்ய முடியாது. நமது இன்றைய எண்ணங்களும், செயல்பாடுகளும்தான் எதிர்கால வாழ்வை நிர்ணயம் செய்கிறது என்றால் மிகையாகாது. இதை புரிந்துதான் நம் முன்னோர்கள் ‘‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’’ என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள். சமீப காலங்களில் சொத்துக்காக தன் தகப்பனை கொலை செய்த மகன், மாமியாரை வீட்டைவிட்டு விரட்டிய மருமகள், கள்ளக் காதலுக்காக, தான் பெற்றெடுத்த பிள்ளைகளை கொலை செய்த தாய் என குடும்ப உறவுகள் தொடர்பான அதிபயங்கரமான செய்திகளை விதவிதமாக கேள்விப்படுகிறோம். இவைகள் அனைத்தும் நமது மனுகுலத்திற்கே ஆபத்தானது என்பதை உணர வேண்டிய காலத்தில் நாம் உள்ளோம். தாய் தந்தையர்களை அலட்சியம் செய்தல் பாவம் மட்டுமல்ல, நமது ஆயுள் காலத்தையும் குறைத்துவிடும். எனவேதான், ‘‘உன் தேவனாகிய கர்த்தர், உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும், உன் தாயையும் கனம்பண்ணுவாயாக’’ (யாத் 20:12) என்று இறை வேதம் எச்சரிக்கிறது.
– அருள்முனைவர்.
பெவிஸ்டன்.
The post முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! appeared first on Dinakaran.