இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, “ஜெயலலிதா தொடர்புடைய தங்க, வரை நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கர்நாடக அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். வருகிற மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடக உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வழக்கை நடத்துவதற்கு கர்நாடக அரசு செலவழித்த ரூ.5 கோடியை தமிழக அரசு செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டார். இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் தனித்தனியாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கூடாது. அவற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரினர்.
இந்த மனுக்கள் இன்று நீதிபதி நவாஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தற்காலிக தடை விதித்த நீதிபதி நவாஸ், தீபக், தீபா மனுக்களுக்கு பதிலளிக்க அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
The post ஜெயலலிதாவின் 17 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை : கர்நாடக உயர்நீதிமன்றம் ஆர்டர்!! appeared first on Dinakaran.