இங்கிருந்து ஈரோடு, திருச்சி, சேலம், சென்னை, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நாளை ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு நேற்று மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு கிலோ மல்லிகை ரூ.1,200, கனகாம்பரம் ரூ.800க்கு விற்பனையானது.
இதுதவிர சம்பங்கி பூ ரூ.250, ரோஜாப்பூ ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.250 முதல் ரூ.300 வரையிலும், முல்லை பூ ரூ.550, ஜாதிப்பூ ரூ.400, கோழிக்கொண்டை ரூ.50, செண்டுமல்லி ரூ.60, செவ்வந்தி ரூ.200, மரிக்கொழுந்து ரூ.80, அரளி பூ ரூ.500, காக்கரட்டான் ரூ.600, விருட்சி ரூ.250க்கு விற்பனையானது. மதுரை : மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நேற்று ஒரு கிலோ மல்லிகை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லைப்பூ ரூ.800, கனகாம்பரம் ரூ.700க்கும் விற்றது. மல்லிகைப்பூ விலை இன்று இரு மடங்கு உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post மல்லிகை விலை ‘கிடுகிடு’ கிலோ ரூ.1,200க்கு விற்பனை appeared first on Dinakaran.