ஜம்முவில் ராணுவம் பாதுகாப்பு ஒத்திகை

ஜம்மு: ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை நடப்பு ஆண்டில் இந்தியா ஏற்றுள்ளது, இதையடுத்து பல்வேறு தலைப்புகளின் கீழ் நாடு முழுவதும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஜம்மு தலைநகர் ஸ்ரீநகரில் சுற்றுலா பணிக்குழு கூட்டம் மே 22 முதல் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜி20 கூட்டத்துக்கு முன்போ, கூட்டம் நடைபெறும்போதோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து ஜம்மு -நகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணிகள் குறித்து இந்திய ராணுவத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். ரம்பன் பகுதியில் காவல்துறையினர், ராணுவத்தினர், தனியார் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவை இணைந்து பாதுகாப்பு தொடர்பான பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

The post ஜம்முவில் ராணுவம் பாதுகாப்பு ஒத்திகை appeared first on Dinakaran.

Related Stories: