தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் , ஹமாஸின் 13 நிலைகளை அழித்துவிட்டதாகவும் சுரங்கப்பாதைகளை ஹமாஸ் அமைப்பினர் மூடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் ஏவிய 8 ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க வழித் தடங்களை அழிக்க ஸ்பாஞ்ச் குண்டுகளை பயன்படுத்த இஸ்ரேல் முடிவு எடுத்துள்ளது. அதன் மூலம் சுரங்கங்களை நுரைகளால் மூட முடியும் என்றும் இதுவே ஹமாஸ் அமைப்பை அழிப்பதற்கான ஒரே வழி என்றும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதால் காசாவில் இணைய வசதி மற்றும் மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.அதே சமயம் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
இதற்கிடையே ஹமாஸ் குழு, பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் குழு மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஹமாஸ் முதலீடு செய்துள்ள சொத்துக்களையும் ஹமாஸுடன் இணைந்த நிறுவனங்களையும் முடக்கும் விதமாக இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
The post ஹமாஸின் பாதாள உலகம்.. சுரங்க வழித்தடங்களை அழிக்க ஸ்பாஞ்ச் குண்டுகளை கையில் எடுக்கும் இஸ்ரேல்!! appeared first on Dinakaran.