×

இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : அதிகாரிகள் ஆய்வு!!

மும்பை : மகாராஷ்ட்ர மாநிலம் ஹிங்கோலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியுள்ளது. காலை 7.14 மணியளவில் நிகழ்ந்துள்ள இந்த நிலநடுக்கம், ஹிங்கோலியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் அளித்துள்ளது. இதனால் ஹிங்கோலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே மகாராஷ்ட்ராவில் நிலநடுக்கம் ஏற்பட்ட 3 மணி நேரத்தில் இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இது பதிவாகியுள்ளது.குறிப்பாக இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே அதாவது கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கிமீ தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பெரியளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற போதிலும், நிலநடுக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : அதிகாரிகள் ஆய்வு!! appeared first on Dinakaran.

Tags : Powerful 6.4 magnitude earthquake south of ,South Africa ,Indian Ocean ,Mumbai ,Hingoli ,Maharashtra ,National Geological Center ,magnitude earthquake ,
× RELATED வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த...