×

22 இந்திய மீனவர்கள் பாக். விடுதலை

அகமதாபாத்: கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022ம் ஆண்டு டிசம்பர் வரை குஜராத்தை ஒட்டிய அரேபிய கடலில் கடல் எல்லைக்கு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது 22 மீனவர்கள் பாகிஸ்தானின் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானின் கராச்சி சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் சமீபத்தில் விடுவிக்கப்ப்டனர்.

இதனை தொடர்ந்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் நேற்று முன்தினம் மாலை குஜராத்தின் வதோதராவை அடைந்தனர். இவர்களில் 18 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். 3 பேர் டையூ யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். மற்றொருவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். பாகிஸ்தான் சிறையில் இன்னும் 195 இந்திய மீனவர்கள் உள்ளனர்.

The post 22 இந்திய மீனவர்கள் பாக். விடுதலை appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Ahmedabad ,Pakistan Navy ,Arabian Sea ,Gujarat ,Karachi ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் மாநிலம் தவுபால் பகுதியில் லேசான நிலநடுக்கம்