இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டி பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. இந்திய அணியில் ரோகித், கோஹ்லிக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டது. மாலிக், அக்சருக்கு பதிலாக ருதுராஜ், உனத்கட் சேர்கப்பட்டனர்.இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் பாண்டியா 70 ரன்களும் இஷான் கிஷான் 77 ரன்களும் சுப்மன் கில் 84 ரன்களும் சஞ்சு சாம்சன் 51 ரன்களும் எடுத்து இருந்தனர்.
50 ஓவரில் 352ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே சறுக்கலை சந்தித்தது. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகவே, ஆலிக் ஆத்ன்ஸ் மட்டும் 32 ரன்கள் எடுத்து இருந்தார். கேப்டன் ஷாய் ஹோப் 5 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.அதிகபட்சமாக குடகேஷ் மோதி 39 ரன்களும், அல்ஜாரி ஜோசப் 26 ரன்களும், யானிக் கரியா 19 ரன்களும் எடுத்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவரிகளில் 10 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இதன் மூலம் இந்திய அணி 200 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என்ற வெற்றி கணக்குடன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரையும் கைப்பற்றியது.
The post 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி… வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா.! appeared first on Dinakaran.