வடமாநிலங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். மக்களை சந்தித்துள்ளேன். அவர்களுக்கு ஒரு மொழி தான் தெரியும். 2வது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்வி கொள்கை சொல்கிறது. ஆனால், வடமாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்களே நியமிக்கப்படவில்லை. தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை செயல்படவில்லை. தமிழ்நாட்டில் 52 கேந்திர வித்யாலயா பள்ளிகள் உள்ளது. அதை நடத்துவது ஒன்றிய அரசு. 52 பள்ளிகளிலும் தமிழையே கற்றுக்கொடுக்கவில்லை. இவர்கள் எந்த முகத்தோடு வந்து தமிழ்நாடு அரசை பார்த்து நீங்கள் மும்மொழி திட்டத்தை நிறைவேற்றவில்லை. அதனால் நிதி வழங்கவில்லை என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த பிரச்னையில் பாஜவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒரு அணியில் நிற்கிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு அரசியல் கட்சிகள் துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post வடமாநிலங்களில் ஒரு மொழி தான் உள்ளது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை இல்லை: ப.சிதம்பரம் பேட்டி appeared first on Dinakaran.