10 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைமை மாறியிருக்கிறது: பிரதமர் மோடி

கவுகாத்தி: நமது புனித தலங்களின் முக்கியத்துவத்தை முந்தைய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளத்தவறி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் ரூ.11,600 கோடியிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது, கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைமை மாறியிருப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது.

எந்த நாடும் தனது கடந்த காலத்தை அழித்து மறைப்பதன் மூலம் வளர்ச்சி அடைய முடியாது. நமது புனித தலங்களின் முக்கியத்துவத்தை முந்தைய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளத்தவறி விட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் அமைதி திரும்பியுள்ளது. 7,000க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர் என்று மோடி தெரிவித்துள்ளார்.

The post 10 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைமை மாறியிருக்கிறது: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: