முதல் காலிறுதியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி இன்று காலை நேபாள அணியை எதிர்கொள்கிறது. ரோகித் பவுடெல் தலைமையிலான நேபாளம், இத்தொடரில், சர்வதேச டி20ல் 300+ ரன் குவித்த முதல் அணி, அதிக ரன் வித்தியாசத்தில் வென்ற அணி, குறைந்த பந்துகளில் அரைசதம், சதம் விளாசிய அணி என பல வரலாற்று சாதனைகளை நேபாளம் படைத்துள்ளது. எனினும், பலம் வாய்ந்த இந்திய அணியை சமாளிப்பது நேபாளத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். இன்று நடைபெறும் 2வது காலிறுதியில் பாகிஸ்தான் – ஹாங்காங் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
The post ஆண்கள் டி20 காலிறுதியில் இந்தியா-நேபாளம் மோதல் appeared first on Dinakaran.