கடந்த 2 வாரங்களாக வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. கடந்த 15ம் தேதி 53 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 59 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் 6 அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை வைகை அணையின் நீர்மட்டம் 58.76 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,492 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 69 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை வைகை அணை நீர்மட்டம் 6 நாட்களில் 6 அடி உயர்வு appeared first on Dinakaran.