தொடர் விடுமுறை எதிரொலி!: அக்.20, 21ல் நெரிசல்மிகு மாலை நேரத்தில் மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு.. பயணிகள் மகிழ்ச்சி..!!

சென்னை: தொடர் விடுமுறையால் நெரிசல்மிகு மாலை நேரத்தில் மெட்ரோ இரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை (திங்கள்கிழமை) மற்றும் சரஸ்வதி பூஜை (செவ்வாய்க்கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, நாளை ( அக்.20) மற்றும் நாளை மறுநாள் (அக். 21) இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவை நாளை (அக்.20) மற்றும் நாளை மறுநாள் (அக்.21) மட்டுமே என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

The post தொடர் விடுமுறை எதிரொலி!: அக்.20, 21ல் நெரிசல்மிகு மாலை நேரத்தில் மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு.. பயணிகள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: