இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: காம்பேக்ட் துணை மின் நிலையம் அமைக்க 2,400 சதுர அடி இடம் மட்டுமே தேவைப்படும். மேலும் தேவைக்கேற்ப ஏற்ப, 11 கி.வோ., 33 கி.வோ., முதல், 66 கி.வோ., வரை, பல்வேறு மின்னழுத்த நிலைகளில் செயல்படும் வகையில் வடிவமைக்கலாம். இவற்றை அதிநவீன டிஜிட்டல் அமைப்புகள் மூலமும் நிர்வகிக்க முடியும். இந்த பெட்டி, தொலைதொடர்பு கருவிகள் மூலம் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்படும். ஆளில்லாமல் தானியங்கி முறையில் இயங்கும். இந்த பெட்டியில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், தானியங்கி அலாரம் அமைப்புகள் அதிகாரிகளை எச்சரிக்கும். கட்டுப்பாட்டு அறையில் இருந்தே, பிரச்னை சரி செய்யப்படும். துணைமின் நிலையம் அமைக்கும் செலவும், ரூ.15 கோடியில் இருந்து, ரூ.10 கோடியாக குறையும். முதல் கட்டமாக, சென்னையில் இரு இடங்களில் காம்பேக்ட் துணைமின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
The post சிறிய இடத்தில் அதிக பாதுகாப்புடன் காம்பேக்ட் துணை மின் நிலையங்கள்: மின் வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.