இதில் 14 குடும்பங்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு தேர்வாய் கண்டிகை பகுதியில் புல எண் 289/54 முதல் 289/67 வரை உள்ள இடத்தில் ஒவ்வொரு பயனாளிக்கும் 2.5 சென்ட் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஒரு வருடம் ஆகியும் இதுவரை 14 பயனாளிகளுக்கு நிலத்தை முறையாக அளவீடு செய்து ஒப்படைக்கப்படவில்லை. இதனால் அரசு இலவச வீடு ஒதுக்கீடு செய்தும், வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர். எனவே தாங்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தினை அளவீடு செய்து இலவச வீட்டு மனையினை ஒப்படைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.
The post இலவச வீட்டு மனைக்குரிய இடத்தை ஒப்படைக்க வேண்டும்: கலெக்டரிடம் பழங்குடியின மக்கள் மனு appeared first on Dinakaran.