The post அரசு பஸ் கவிழ்ந்து 50 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
அரசு பஸ் கவிழ்ந்து 50 பேர் படுகாயம்

விருத்தாசலம்: சேலத்தில் இருந்து 50 பயணிகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு, கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு அரசு பஸ் சென்றது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்த டிரைவர் வரதராஜன்(50) ஓட்டி வந்தார். தலைவாசல் புனல் வாசலை சேர்ந்த ஜெயபாலன் (42) கண்டக்டராக இருந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே வந்தபோது, திடீரென சென்டர் மீடியனில் மோதி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 50 பேரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக விருத்தாசலம்- சேலம் நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.