இறங்கிய வேகத்தில் சரசரவென உயர்ந்த தங்கம் விலை: நகை பிரியர்கள் அதிர்ச்சி

சென்னை: இறங்கிய வேகத்தில் சரசரவென தங்கம் விலை உயர்ந்தது. இன்று சவரனுக்கு ரூ.136 உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.

இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அதன்படி, தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. கடந்த மே மாதம் 4ம் தேதி ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதை தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. கடந்த 11ம்தேதி முதல் 20ம்தேதி வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1024 உயர்ந்தது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

21ம்தேதி சவரன் ரூ.44560ம், 22ம்தேதி சவரன் ரூ.44,440ம் என குறைந்தது. நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,280க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து வந்த வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,416க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை திடீரென உயர்ந்ததால் நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post இறங்கிய வேகத்தில் சரசரவென உயர்ந்த தங்கம் விலை: நகை பிரியர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: