×

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,560க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இது அனைவரும் அறிந்தது. குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,660-க்கு விற்பனையானது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,280-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,695-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,150-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,200-ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு ரூபாய் 30 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.93.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.93,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,560க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,South India ,Dinakaran ,
× RELATED தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்… இன்றைய தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?