சென்னை: காஸா மருத்துவமனை மீதான தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட பல மனிதர்கள் தங்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் “சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிராக மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்துகிறது; எந்தவொரு பிரச்னைக்கும் போர் ஒருபோதும் தீர்வாகாது; காஸாவில் அமைதியை மீட்டெடுக்கவும், மனிதாபிமானமற்ற வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் முன்வர வேண்டிய நேரம் இது” எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.