நள்ளிரவில் வேன் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தளவாய்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியை வேன் டிரைவர் முந்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வேன், லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனின் இடதுபுறம் அமர்ந்திருந்த வீரப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வேன் டிரைவர் மாரியப்பன் உள்பட 11 பேர் காயமடைந்தனர். தகவலறிந்ததும் கயத்தாறு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கயத்தாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
The post கயத்தாறு அருகே லாரி மீது வேன் மோதி நெல்லை தொழிலதிபர் பலி appeared first on Dinakaran.