அப்போது ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள முடியாத நிலைமை குறித்து விளக்கினார். மேலும் ரஷ்யாவின் பிரதிநிதியாக வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வார் என்று அதிபர் புடின் அப்போது தெரிவித்தார். அதற்கு அதிபர் புடின் கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும், ஜி 20 மாநாட்டில் இந்தியாவின் தலைமையை ஏற்று, அனைத்து வகையிலும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளித்தமைக்கு புடினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அதோடு இரு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். ஜோகன்னஸ்பர்க்கில் சமீபத்தில் முடிவடைந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு உட்பட உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
The post ஜி 20 மாநாட்டிற்கு வரமுடியவில்லை பிரதமர் மோடியிடம் பேசினார் ரஷ்ய அதிபர் புடின்: வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி வைப்பதாக வாக்குறுதி appeared first on Dinakaran.