×

ரூ.5.84 லட்சம் மதிப்புள்ள வெள்ளி அண்டா நன்கொடை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.5.84 லட்சம் மதிப்புள்ள வெள்ளி அண்டா நன்கொடையாக வழங்கப்பட்டது. ஆந்திர மாநிலம், சத்ய சாய் மாவட்டம், சனிவாரிப்பள்ளியைச் சேர்ந்த தொழிலதிபரான ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.5.84 லட்சம் மதிப்பிலான 6.7 கிலோ எடைகொண்ட வெள்ளி அண்டாவை நேற்று நன்கொடையாக வழங்கினார். இதனை தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். அப்போது கதிரி எம்எல்ஏ உடனிருந்தனர். ஆண்டு தோறும் ஏழுமலையான் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதாகவும், இந்த வருடம் ஏழுமலையான் கோயிலுக்கு பெங்களூருவில் தயார் செய்யப்பட்ட அண்டாவை நன்கொடையாக வழங்கியதாக அவர்கள் கூறினர்.

The post ரூ.5.84 லட்சம் மதிப்புள்ள வெள்ளி அண்டா நன்கொடை appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Tirupati Eyumalayan Temple ,Sanivaripalli ,Satya Sai District, Andhra State ,Tirupati ,Esumalayan Temple ,Dinakaran ,
× RELATED லட்டில் குட்கா பாக்கெட் இருந்தது உண்மை இல்லை: திருப்பதி தேவஸ்தானம் தகவல்