முன்கூட்டியே புறப்பட்ட விமானம்: பயணிகள் தவிப்பு

திருச்சி: திருச்சி-சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் முன்கூட்டியே புறப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட இருந்த விமானம் மதியம் 3 மணிக்கே சிங்கப்பூர் புறப்பட்டது. திருச்சியில் இருந்து முன்கூட்டியே விமானம் புறப்பட்டதால் சுமார் 20 பயணிகள் சிங்கப்பூர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால் மாற்று விமானம் ஏற்பாடு செய்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

The post முன்கூட்டியே புறப்பட்ட விமானம்: பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: