சிங்கப்பெருமாள்கோவில் அருகே ரயில் மோதி விவசாயி பலி: ஆர்பிஎப் விசாரணை

செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள்கோவில் அருகே, ரயில் மோதி விவசாயி பரிதாபமாக பலியானார். சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (51). விவசாயி. இவர், சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.இந்நிலையில், திருக்கச்சூர் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க இவர் முயற்சித்தார்.

அப்போது, அவ்வழியே வந்த ரயில், முருகன்மீது வேகமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். தகவலறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகனின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post சிங்கப்பெருமாள்கோவில் அருகே ரயில் மோதி விவசாயி பலி: ஆர்பிஎப் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: