திருவள்ளூர் ஆயில்மில் அம்பேத்கர் சிலையில் தொடங்கிய ஒற்றுமை இந்தியா நடைபயணம், ரயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை வரை சென்று நிறைவு பெற்றது. அப்போது துரை சந்திரசேகர் எம்எல்ஏ பேசுகையில், ‘50 ஆண்டுகளாக நாட்டை ஒற்றுமையாக கட்டி காத்தது காங்கிரஸ் கட்சி. சனாதனம் குறித்து பேசியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் வீட்டில் அமலாக்க துறை சோதனை நடத்துமா? எங்களுக்கு அகிம்சை வழியில் போராடவும் தெரியும், அராஜகத்தில் ஈடுபடுபவர்களை அடக்கவும் தெரியும்’ என்றார். இதில் வட்டார தலைவர்கள் ஜி.எம்.பழனி, ராமன், முகுந்தன், சதீஷ், மற்றும் செல்வகுமார், வி.எம்.தாஸ், குமார், ஈஸ்வரன், உதயசந்தர், கௌதம், சபீர் உள்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்யுமா?: துரை சந்திரசேகர் எம்எல்ஏ கேள்வி appeared first on Dinakaran.