அமலாக்கத்துறை சோதனை பற்றி சிறிதும் கவலை இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: அமலாக்கத்துறை சோதனை பற்றி சிறிதும் கவலை இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்; இன்றும் நாளையும் பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன. பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். பா.ஜ.க. ஆட்சிக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பா .ஜ.க. எரிச்சலடைந்திருப்பதன் வெளிப்பாடுதான் அமலாக்கத்துறை சோதனை. அமலாக்கத்துறை சோதனை பற்றி கிஞ்சித்தும் திமுக கவலைப்படவில்லை. அமலாக்கத்துறை சோதனையை அமைச்சர் பொன்முடி சட்டப்படி சந்திப்பார். தொடர்ந்து 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை. வடமாநிலங்களில் பின்பற்றிய உத்தியை தற்போது தமிழ்நாட்டில் பாஜக பயன்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி தர தயாராக இருக்கிறார்கள் எனவும் கூறினார்.

The post அமலாக்கத்துறை சோதனை பற்றி சிறிதும் கவலை இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: