கடந்த 10ம் தேதி கட்டயன்விளை பகுதிக்கு தனிப்படை போலீசார் அவரை பிடிக்க சென்றபோது தப்பிவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் பரமார்த்தலிங்கபுரம் அன்பு இல்லம் அருகே சாந்தகுமார் நண்பர்களுடன் சீட்டுவிளையாடிக்கொண்டு இருந்தார். அவரை கைது செய்ய அங்கு தனிப்படை போலீசார் 2 பேர் சென்றனர். அவர்களை பார்த்ததும் பயந்துபோன சாந்தகுமார் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷமாத்திரையை தின்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து வடசேரி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
The post நகை பறித்த மின்வாரிய ஊழியர் போலீசை பார்த்ததும் தற்கொலை appeared first on Dinakaran.