பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூகநீதிக்கான கட்சிகள் ஓரணியில் திரள திருமாவளவன் அழைப்பு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதர அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கான 10சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை அரசியல் சட்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இந்த 10சதவீத இட ஒதுக்கீடு ஒட்டு மொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதற்கானதாகும். எனவே, ஓபிசி, எஸ்சி- எஸ்டி மக்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாப்பதற்கும், அத்துடன் இட ஒதுக்கீட்டின் அளவை மக்கள் தொகை அடிப்படையில் சமூகவாரியாக உயர்த்துவதற்குரிய செயல்திட்டத்தை வகுப்பதற்கும் முன்வரவேண்டும் என சமூகநீதிக்கான அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விசிக சார்பில் அறைகூவல் விடுக்கிறோம். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

The post பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூகநீதிக்கான கட்சிகள் ஓரணியில் திரள திருமாவளவன் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: