இவரது கருத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பெஹரா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளதால், பலரும் அவரது பேச்சு குறித்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இருந்தும் தான் பேசிய சர்ச்சை கருத்து குறித்து, இதுவரை பெஹரா தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதுகுறித்து தொழில்முனைவோரும், ஐஐடி டெல்லியின் முன்னாள் மாணவருமான சந்தீப் என்பவர் வெளியிட்ட பதிவில், ‘இந்த நாட்டில் கடந்த 70 ஆண்டுகளாக எவையெல்லாம் கட்டமைக்கப்பட்டதோ, அவற்றை மூடநம்பிக்கையின் மூலம் இந்த முட்டாள்கள் அழித்து விடுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார். பெஹராவின் சர்ச்சை கருத்து பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், அவர் ஏற்கனவே ‘வேத மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம், எனது நண்பர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தீய சக்திகளிடமிருந்து விடுவித்தேன்’ என்று கூறினார். தற்போது நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு காரணம், மக்கள் இறைச்சி சாப்பிடுவது தான் என்று சர்ச்சை கருத்தை கூறியுள்ளதால், அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
The post இறைச்சி சாப்பிடுவதால் தான் நிலச்சரிவு, மேக வெடிப்பு ஏற்படுகிறது!: ஐஐடி இயக்குனரின் சர்ச்சை கருத்தால் சலசலப்பு appeared first on Dinakaran.