மாணவியிடம் ஆபாச பேச்சு போக்சோவில் டிரைவர் கைது

தண்டையார்பேட்டை: ராயபுரம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, கடந்த 30ம் தேதி பள்ளி முடிந்து தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் இருந்து ஷேர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றார். அப்போது ஆட்டோ டிரைவர், மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர், ராயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டை அம்மையப்பன் தெருவை சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் பாஸ்கரன் (51) என்பவர் மாணவியிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது. அவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post மாணவியிடம் ஆபாச பேச்சு போக்சோவில் டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: