திமுக சட்டத்துறை நிர்வாகிகள் தேர்வு: சென்னையில் 20ம் தேதி நேர்காணல்

சென்னை: திமுக சட்டத்துறை மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் தேர்வுக்கு நாளை மறுநாள் சென்னையில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ வெளியிட்ட அறிக்கை: கழகத் தலைவரின் அறிவுரைக்கிணங்க, திமுக சட்டத்துறை மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் தேர்வுக்கான நேர்காணல் வரும் 20ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெறும்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு காலை 9 மணிக்கும், திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டங்களுக்கு மாலை 4 மணிக்கும் நடைபெறும். ஏற்கனவே சட்டத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தலைமை கழகத்திலோ அல்லது மாவட்ட கழக அலுவலகத்திலோ சமர்பித்தவர்கள் மட்டுமே இந்த நேர்காணலில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக சட்டத்துறை நிர்வாகிகள் தேர்வு: சென்னையில் 20ம் தேதி நேர்காணல் appeared first on Dinakaran.

Related Stories: