தீபாவளி நாளில் இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல்

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும், தீபாவளி நாளில் இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கபடுவதாக சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தீபாவளிக்கு மாநிலங்களில் எந்த எந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று ஏற்கனவே கட்டுபாடுகள் விதிக்கபட்டிருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் அனுமதி வழங்கபட்டுள்ளது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காலை மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கபட்டுள்ளது.

குறிப்பாக பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், பாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

The post தீபாவளி நாளில் இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: