ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது

சிவகாசி: ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனேவே தொழிலாளி குமரேசன் உயிரிழந்த நிலையில் தற்போது தொழிலாளி சுந்தர்ராஜ் உயிரிழந்துள்ளார். படுகாயமனடைந்த தொழிலாளர்கள் அய்யம்மாள், இருளாயி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமாகின என தகவல் வெளியாகியுள்ளது.

The post ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது appeared first on Dinakaran.

Related Stories: