அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “முதலில் மாசுபட்ட ஆழ்துளை கிணற்று நீரில் மாநகராட்சி ஆணையர் குளிக்கட்டும், அதன் பிறகு முடிவு எடுக்கட்டும். குடிநீர் அவசியம்; ஆழ்துளை கிணற்றை பயன்படுத்தாவிட்டாலும், அது அருகில் இருக்கும் நீர்நிலைகளையும் மாசுபட வைக்கும். இது குறித்து உடனே ஆய்வு செய்து தீர்வு காணப்பட வேண்டும். மனு குறித்து காரைக்குடி மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம்,”இவ்வாறு தெரிவித்து வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
The post முதலில் மாசுபட்ட ஆழ்துளை கிணற்று நீரில் மாநகராட்சி ஆணையர் குளிக்கட்டும், அதன் பிறகு முடிவு எடுக்கட்டும் : ஐகோர்ட் காட்டம் appeared first on Dinakaran.