×

கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூட்டம் நடத்தி அறிக்கை உள்துறை செயலாளர் மூலம் முதலமைச்சருக்கு, ஆட்சியர்கள் அனுப்பி வைக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதை பொருட்கள் தடுப்பு தொடர்பாக வாரந்தோறும் திங்கட்கிழமை கூட்டம் நடத்த வேண்டும். மெத்தனால் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டும், எல்லைகளில் சிறப்பாக செயல்படும் மதுவிலக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.

The post கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED மக்கள் நம்பிக்கை வைத்து...