இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இருந்து, கூடுதலாக சிங்கப்பூர்- சென்னை- சிங்கப்பூர் இடையே, விமான சேவைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து 158 பயணிகளுடன் புறப்பட்டு, நள்ளிரவு 11.50 மணிக்கு, சென்னை வந்தது. அதே விமானம் சென்னையில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு 131 பயணிகளுடன் சிங்கப்பூர் செல்ல வேண்டியது, தாமதமாக இன்று அதிகாலை 1.42 மணிக்கு புறப்பட்டது. இது தினசரி விமானங்களாக இயக்கப்படுகிறது. இதனால் சென்னை-சிங்கப்பூர்-சென்னை இடையே, இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 14 ஆக அதிகரித்துள்ளது.
இப்போது புதிதாக சென்னைக்கு விமான சேவையை தொடங்கியுள்ள ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஏற்கனவே சிங்கப்பூர்- சென்னை- சிங்கப்பூர் இடையே இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கு பாதிப்பு காரணமாக இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்ததும், தமிழ்நாட்டில் திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு இந்த விமான நிறுவனம், விமான சேவையை தொடங்கி நடத்தியது. ஆனால் சென்னைக்கு மட்டும் தொடங்காமல் இருந்தது. இப்போது மூன்றரை ஆண்டு இடைவெளிக்கு பின்பு, மீண்டும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சிங்கப்பூர்- சென்னை- சிங்கப்பூர்- இடையே விமான சேவையை தொடங்கியுள்ளது. இது விமான பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தவை: சென்னையில் இருந்து மீண்டும் சிங்கப்பூருக்கு விமான சேவை appeared first on Dinakaran.