இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசுக்கும், மத்திய விஜிலென்ஸ் அதிகாரிக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கான்சியஸ் இளங்கோ ஆஜரானார். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆதி குமரகுரு, மனுதாரர் புகாரின் அடிப்படையில், 12 வாரத்துக்குள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் மற்றும் மீனாகுமாரி உள்ளிட்ட டாக்டர்களிடம் விரிவான விசாரணை நடத்தி, ஒன்றிய அரசு தகுந்த உத்தரவை 12 வாரத்துக்குள் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
The post கொரோனா ஆய்வு நிதியில் முறைகேடு சித்தா டாக்டர்களிடம் விசாரித்து நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.