இது தவிர தேயிலை தோட்டங்களில் சிறுத்தைகள் மற்றும் காட்டுமாடுகள் நடமாட்டம் இருப்பதால் தொழிலாளர்கள், விவசாயிகள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.இந்நிலையில், குன்னூர் அருகே கரன்சி பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்றில் பாறை மீது ஒரு சிறுத்தை நேற்று ஒய்யாரமாக அமர்ந்திருந்தது. அது அங்கும் இங்கும் உலா வந்தது. தொழிலாளி ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உலா: தொழிலாளர்கள் அச்சம் appeared first on Dinakaran.