சமையல் பாத்திரங்களை எடுத்துச் செல்லவே உணவு கொட்டப்பட்டது; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..!!

மதுரை: மதுரையில் மாநாட்டில் மலை போல் உணவு கொட்டப்பட்டது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். மாநாடு முடிந்த பின்னர் சமையல் பாத்திரங்களை எடுத்து செல்வதற்காக மீதமிருந்த உணவுகள் கீழே கொட்டப்படுவதாக அவர் கூறியிருக்கிறார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், மாநாட்டிற்கு லட்சக்கணக்கானோர் வர திட்டமிட்டிருந்த நிலையில், ஏராளமான தொண்டர்கள் வராததால் உணவு மீதமானதாக கூறியுள்ளார். சிதறி கிடந்த உணவு மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது என்றும் அவசரகதியில் உணவு சமைக்கப்பட்டதன் காரணமாகவே உணவு மிஞ்சியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரை வளையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாநாட்டிற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு 3 வேலையும் உணவு வழங்கப்பட்டது. மாநாடு நடைபெற்று கொண்டிருக்கும் போதே பல கவுண்டர்களில் வழங்கப்பட்ட உணவில் தரமில்லை என்றும் சரியாக வேகவில்லை என்றும் புகார் கூறிய தொண்டர்கள், உணவை கீழே கொட்டிச் சென்றனர். சமையல் பாத்திரங்களை எடுக்க வந்த பணியாளர்கள், டன் கணக்கில் கொட்டி கிடந்த உணவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

The post சமையல் பாத்திரங்களை எடுத்துச் செல்லவே உணவு கொட்டப்பட்டது; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: