சென்னை – கன்னியாகுமரி ஏசி பஸ் ரூ.3,000, சாதாரண பஸ் ரூ.1,400, சென்னை – நெல்லை ஏசி பஸ் ரூ.2,450, சாதாரண பஸ் ரூ.1,400, சென்னை – மதுரை ஏசி பஸ் ரூ 2,000, சாதாரண பஸ் ரூ. 1,200 வரை என டிக்கெட் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒருசில பஸ்களில் மட்டுமே சில இடங்கள் காலியாக உள்ளன. தேவை அதிகரித்து வருவதால் தீபாவளி, பொங்கல் பண்டிகையை போல கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தினர். ஏ.சி. பஸ்களில் உட்கார்ந்து பயணம் செய்யவே ரூ.2000 வரை வசூலிக்கிறார்கள். மதுரை, திருநெல்வேலிக்கு படுக்கை வசதி ரூ.3000 முதல் ரூ.4000 வரை வசூலிக்கப்படுகிறது.
ஆடி மாதத்தில் பொதுவாக வெளியூர் பயணம் குறைவாக இருக்கும் என்பதால் கட்டணத்தை குறைத்து விடுவார்கள். ஆனால் தற்போது தொடர் விடுமுறை வருவதால் அதை பயன்படுத்தி டிக்கெட் கட்டணத்தை கூட்டி விட்டனர். கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து இன்றும், நாளையும் பெரும்பாலான பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டதால் கட்டணத்தை மேலும் உயர்த்தி வருகின்றனர். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்களிலும் கட்டணம் அதிகரித்து உள்ளது.
The post தொடர் விடுமுறையால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது: ஆம்னி பஸ்களில் கட்டணம் 30 சதவீதம் உயர்வு appeared first on Dinakaran.