இந்த செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்தார். கவுரவ் கோகாய், தாரிக் அன்வர் உள்ளிட்டோர் கார்கே முன்மொழிந்ததை வழிமொழிந்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
The post காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.