பாதுகாப்பான இடங்களில் உள்ள மக்களை மீட்கவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைக் கண்டுபிடிக்கவும் மத்திய அரசு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். உள்கட்டமைப்பிற்கு நிறைய சேதம் ஏற்பட்டுள்ளது, இந்த அழகான மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்ப மத்திய மற்றும் மாநில அரசு நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த மனிதாபிமான நெருக்கடியில் காங்கிரஸ் கட்சியும் அதன் தொண்டர்களும் அனைத்து வழிகளிலும் மக்களுக்கு உதவ வேண்டும்.
சூழலியல் ரீதியாக பலவீனமான இமயமலை மாநிலங்களைக் கையாள்வதில் மத்திய அரசு தனது அணுகுமுறையை மறுசீரமைக்க வேண்டும். சிக்கிம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் வெள்ளப்பெருக்கு போன்ற துயரங்களை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இதனால் இந்த மாநிலங்கள் தங்களை மிகவும் நிலையான முறையில் மீண்டும் கட்டியெழுப்ப போதுமான நிதியைப் பெற வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சிக்கிம் மக்களுக்கு உதவ தொண்டர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு appeared first on Dinakaran.