×

நிலக்கரி ஊழல் வழக்கு: மாஜி எம்பிக்கு ஜாமீன்

புதுடெல்லி: சட்டீஸ்கரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் எம்பி விஜய் தர்தா, அவரது மகன் தேவேந்தர் தர்தா, தொழிலதிபர் மனோஜ் குமார் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் 3 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நீதிபதி தினேஷ் குமார் சர்மா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,இது தொடர்பாக பதிலளிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதி சர்மா, விஜய் தர்தா, தேவேந்தர் மற்றும் மனோஜ் குமாருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

The post நிலக்கரி ஊழல் வழக்கு: மாஜி எம்பிக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Vijay Darda ,Devender ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு...