×

ரயில்வே பாதுகாப்பு கட்டமைப்புக்கு தமிழ்நாட்டில் மோப்ப நாய் பயிற்சிக்கு ரூ.5.5 கோடி நிதி

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: ரயில்வே பாதுகாப்புப் படையின் பயிற்சி மையங்களை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் ரூ.35 கோடி மானியம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள ஆர்பிஎப் மோப்பநாய்ப் படைக்கான மண்டலப் பயிற்சி மையத்துக்கு ரூ. 5.5 கோடி கூடுதல் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

The post ரயில்வே பாதுகாப்பு கட்டமைப்புக்கு தமிழ்நாட்டில் மோப்ப நாய் பயிற்சிக்கு ரூ.5.5 கோடி நிதி appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,New Delhi ,Railway Minister ,Ashwini Vaishnav ,Nashik, Maharashtra ,Railway Protection Force ,RPF ,Tamil Nadu ,
× RELATED கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு...