அப்போது பேருந்து ஓட்டுநர் ஜெயக்குமார், ‘‘ஏன் பேருந்தின் கண்ணாடியை கையால் தட்டுகிறாய்” என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, தகாத வார்த்தையில் திட்டி, ஓட்டுநர் ஜெயக்குமாரை கையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றார். இதில் உதட்டில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் ஜெயக்குமார், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, பின்னர் நேற்று முன்தினம் காலை காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாநகர பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபரை தேடி வருகின்றனர்.
The post மாநகர பேருந்து டிரைவரை தாக்கிய போதை ஆசாமி: போலீசார் வலை appeared first on Dinakaran.